Wednesday, 9 September 2015

கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வி.பழநியப்பனுக்கு தேசிய நல்லாசிரியர் விருதினை இந்திய ஜனாதிபதி வழங்கினார்



கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வி.பழநியப்பனுக்கு தேசிய நல்லாசிரியர் விருதினை இந்திய ஜனாதிபதி வழங்கி கொளரவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் மனித வளத்துறை சார்பாக தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

இந்த வருடம் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 22 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தொடக்க, நடுநிலைப்பள்ளியில் இருந்து 15 ஆசிரியர்களும், உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் இருந்து 7 ஆசிரியர்களும் தேர்வாகி உள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த 3 ஆசிரியர்கள் இடம் பெற்றிருந்தனர்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்.தாஸ் (தலக்கஞ்சேரி, திருவள்ளூர்), எஸ்.சுவர்னாபாஸ் (மீஞ்சூர்), வி.கணேசன் (பொன்டூர்), சி.ஏகாம்பரம் (கீழமனக்குடி), என்.பாலசுப்பிரமணியன் (கீழ்மாந்தூர்), கே.சிற்றம்பலம் (இடையப்பட்டி), எஸ்.காளி முத்து (விஸ்வநாதப்பட்டி), பி.தனராஜ் (பொன்னம்பாளையம்).

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்.விஜயலலிதா (நரிகட்டியூர்), டீ.ராணிசிவகாமி (சூண்டி), அரசு உதவி பெறும் தனியார் தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் எஸ்.அமலோற்பவம் (செயிண்ட் ஜான்ஸ் நடுநிலை பள்ளி, ராயப்பேட்டை, சென்னை), ஏ.ஜோசப்பன் செல்வமேரி (ராஜா பரமேஸ்வரி, அண்ணாநகர், மதுரை).

டி.எஸ்.அன்பு எப்சிபாஸ் (டி.என்.டி.டி.ஏ. ராஜமானிய புரம், தூத்துக்குடி), எஸ்.பொன்ராஜ் (சி.எம்.எஸ்.மேரி ஆர்டன், பாளையங்கோட்டை, திருநெல்வேலி), எம்.செல்வகுமார் (ராஜரிஜி அர்த்த நாரீச வர்மா தொடக்கப்பள்ளி, ராயபுரம், சென்னை).

அரசு, அரசு உதவி பெறும், தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்–வி.ஹரிமூர்த்தி (தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைபள்ளி, திருத்துறையூர், கடலூர்), என்.ராமச்சந்திரன் (உடற்கல்வி ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சி.தனபால் (முதுகலை பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, குமலன் குட்டை, ஈரோடு).

எ.பிரான்சிஸ் சேவியர் (தலைமை ஆசிரியர், ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, திருச்சி), பி.ஜார்ஜ்பால் (உதவி தலைமை ஆசிரியர், டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர், சென்னை).

தங்கபிரகாஷ் (முதல்வர் சன்டீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மேட்டுகுளம் வேலூர்), வி.பழனியப்பன் (முதல்வர், சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெண்ணைமலை, கரூர்) ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு ஜனாதிபதி கையில் விருது வாங்கினார்கள்.
கரூர் வெண்ணமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வி.பழநியப்பன் டெல்லியில் உள்ளா ஜனாதிபதி மாளிகையில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் தேசிய நல்லாசிரியர் விருதினை வாங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மனித வள மேம்பாட்டுத்துறை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகிகள் கருப்பண்ணன், பாண்டியன் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் ஏராளமானோர் கொளரவித்தனர். மேலும் கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன், கரூர் பரணி பார்க் மெட்ரிக் பள்ளி முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி நிர்வாகிகள் பலரும் கொளரவித்த வண்ணம் உள்ளனர்.

No comments:

Post a Comment