Wednesday, 9 September 2015

கரூர் வீனஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி 5 மணி நேரம் வீணை வாசித்து தேசிய சாதனை



கரூர் சின்னாண்டாங்கோயில் ரோட்டில் அமைந்துள்ள வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிப்பவர் கே.விஸ்வ ஜனனி, இவர் இப்பகுதியில் வசிக்கும் என்.கிருஷ்ணமூர்த்தி - வி.கே.காயத்ரி இத்தம்பதியினரின் மகளான இவர், இங்குள்ள வீனஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுவயதில் இருந்தே வீணை வாசிப்பதில் பல சாதனைகள் புரிந்த கே.விஸ்வ ஜனனி புதன் கிழமை (09-09-15) அன்று 5 மணி நேரம் வீணை வாசித்து தேசிய சாதனை புரிந்துள்ளார்.
கரூர் வீனஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை வீனஸ் மெட்ரிக் பள்ளி செயலாளர் கே.நதியா துவக்கி வைத்தார். கரூர் வேலன் மருத்துவமனை மருத்துவர் கே.கே.வேலுச்சாமி தலைமை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆசிய, உலக சாதனையாளரும், ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனருமான டிராகன் ஜெட்லி, கரூர் திருக்குறள் பேரவை செயலாளரும், கரூர் தமிழிசை சங்க செயலாளருமான மேலை.பழநியப்பன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
மாணவி கே.விஸ்வ ஜனனி 5 மணி நேரம் வீணை வாசித்து தேசிய சாதனை பிடித்தார். இந்த விருதினை நடுவர்கள் ஜெட்லி, மேலை.பழநியப்பன் ஆகியோர் வழங்கினார். மேலும் இந்த பதிவு ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஸில் இந்த வருடம் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்ச்சியில் தேசிய சாதனை பிடித்த மாணவி. கே.விஸ்வ ஜனனிக்கு கரூர் திருக்குறள் பேரவை சார்பில் செயலாளர் மேலை.பழநியப்பனும், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில் லயன் மண்டல தலைவர் சூர்யா.வே.கதிரவன் ஆகியோர் பாராட்டினார்கள். மேலும்  இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் தமிழரசி இராஜேந்திரன், ஆர்.ஜெயநாராயண சிங், பள்ளி முதல்வர் மங்கையர்கரசி, தாம்ப்ராஸ் ஸ்ரீ தரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

No comments:

Post a Comment